;
Athirady Tamil News

அரவிந்தர் பிறந்த நாள்- புதுச்சேரி நிகழ்ச்சியில் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு..!!

0

ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 75-வது விடுதலை கொண்டாட்ட அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக கம்பன் கலை சங்கம் சார்பில் புதுச்சேரியில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அரவிந்தருக்கு பெருமை சேர்க்கும் வகையில், நாணயம் மற்றும் நினைவு தபால் தலையை வெளியிட்டு அவர் உரை நிகழ்த்த உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.