;
Athirady Tamil News

ஐதராபாத்தில் நகைக்கடையில் பல கோடி வைரம், தங்கம் கொள்ளை..!!

0

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் பவன் குமார். இவர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பிலிம் நகரில் தங்க, வைர நகை விற்பனை மற்றும் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து தங்க நகை தயாரிக்கும் மூலப் பொருட்களை வாங்கி வந்து ஆர்டரின் பேரில் தங்க, வைர நகைகள் செய்து கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். மேலும் நகை பட்டறை அருகிலேயே நகைக்கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடையை மூடிவிட்டு மறு நாள் காலை கடையை திறந்த போது கடையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். லாக்கரில் பல கோடி மதிப்பிலான 4 வைர நெக்லஸ்கள் மற்றும் தங்க நகைகள் காணாமல் போனது. இது குறித்து பவன் குமார் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மிகவும் வலிமையான இரும்பு லாக்கரை கொள்ளையர்கள் எப்படி உடைத்து அதில் இருந்த நகைகளை திருடினார்கள். வடமாநில கொள்ளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதா என வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.