;
Athirady Tamil News

புதிதாக 163 பேருக்கு தொற்று- மகாராஷ்டிரா, டெல்லியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி..!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 185 ஆக இருந்தது. இன்று 163 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 76 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 176 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரத்து 608 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 3,380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 22 குறைவாகும். தொற்று பாதிப்பால் நேற்று மகாராஷ்டிராவில் 2 பேர், டெல்லியில் ஒருவர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 6-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,690 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.