;
Athirady Tamil News

எளிமையான நத்தாரை கொண்டாடுவோம்: ஜனாதிபதி !!

0

இருளை நீக்கி மனிதர்களிடையே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாளிகை வீட்டுக்கும் ஏழைக் குடிசைக்கும் ஒரே விதமான நத்தார் பண்டிகையின் மகிழ்ச்சியை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்.

அனைவருக்கும் அன்பைப் பரப்பும் மற்றும் மனிதநேயத்தைப் பகிர்ந்து கொள்ளும் மக்களாக இந்த பண்டிகைக் காலத்தில் அனைவரும் தங்கள் சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு உறுதியளிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.