;
Athirady Tamil News

இந்தியாவில் புதிதாக 214 பேருக்கு கொரோனா தொற்று!!

0

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்பு 228 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 79 ஆயிரத்து 761 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 204 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 46 ஆயிரத்து 534 ஆக உயர்ந்தது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 2,509 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 6 அதிகம் ஆகும். தொற்று பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 2-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,718 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.