;
Athirady Tamil News

மானிப்பாய் பிரதேச சபையினால் உரம் வழங்கி வைக்கப்பட்டது.!! (படங்கள்)

0

மானிப்பாய் பிரதேச சபையினால், மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட 400 பயனாளிகளுக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இயற்கை உரம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட 15 பயனாளிகளுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான மலசலகூடத்திட்டடத்தை வழங்குவதற்கு கடிதங்களும் கையளிக்கப்பட்டது.

மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதியாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.