;
Athirady Tamil News

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

0

இந்தோனேசியாவின் டானிமர் மாகாணத்தில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் 97 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.