;
Athirady Tamil News

10 சுயேட்சைக் குழுக்களும் 04 அரசியல் கட்சிகளும் கட்டுப்பணம் செலுத்தின!!

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக 10 சுயேட்சைக் குழுக்களும் 04 அரசியல் கட்சிகளும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கம்பஹா, கொழும்பு, காலி, பதுளை, அம்பாறை, குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 10 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.