;
Athirady Tamil News

தொண்டமனாற்றிலிருந்து சடலம் மீட்பு!!

0

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள தொண்டமனாற்று கரையோரம் இன்றைய தினம் புதன்கிழமை காலை முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆற்றில் நீராட சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் , வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.