;
Athirady Tamil News

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலில் 3 போலீசார் பலி!!

0

பாகிஸ்தானின் பெஷாவர் அருகே கைபர் பக்துன்க்வா பழங்குடியினர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள சர்பந்த் காவல் நிலையத்தில் நேற்று 6 தீவிரவாதிகள் கையெறி குண்டு, தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் டிஎஸ்பி உட்பட 3 போலீசார் பரிதாபமாக பலியாகினர்.

இந்த தாக்குதலக்கு தெஹ்ரிக் ஐ தலிபான் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தப்பி ஓடிய தீவிரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.