;
Athirady Tamil News

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு இந்தியா ஆதரவு – உறுதி செய்தது சர்வதேச நாணயநிதியம்!!

0

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்ககைகளிற்கு இந்தியா தன்னை அர்ப்பணித்துள்ளதை சர்வதேச நாணயநிதியம் உறுதி செய்துள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சாத்தியமான உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவுவதற்கு இந்தியா இணங்கியுள்ளது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளிடமிருந்து இதேபோன்ற உத்தரவாதத்தை பெறுவதற்கான இது போன்ற பேச்சுக்களில் இலங்கை ஈடுபட்டுள்ளது என சர்வதேச நாணயநிதியத்தின் பேச்சாளர் ஒருவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

போதியளவு உத்தரவாதங்கள் கிடைத்ததும்,இலங்கை அதிகாரிகள் உட்பட அனைவரும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்ததும், இலங்கைக்கான நிதி ஆதரவு திட்டத்தை சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையிடம் சமர்ப்பிக்க முடியும்,அது இலங்கைக்கு மிகவும் அவசியமாக உள்ள நிதியை கொண்டுவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.