;
Athirady Tamil News

கிளிநொச்சியில் மழையினால் அறுவடை செய்த நெல்லை வீதியில் உலர வைத்துள்ள விவசாயிகள் பாதிப்பு!!

0

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் நேற்றிரவு (23) முதல் பெய்யும் மழையினால் அறுவடை செய்த நெல்லை வீதியில் உலர வைத்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கால போக நெற் செய்கை அறுவடைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அறுவடை செய்யும் நெல்லை விவசாயிகள் உரிய விலையில் சந்தைப்படுத்த முடியாத நிலையில் போதிய நெல் உலர விடும் தளங்கள் இல்லாத நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நெல்லை உலர வைத்து வருகின்றனர்.

குறிப்பாக வீதிகளில் நெல்லை உலர விட்டிருந்த சமயம் நேற்றிரவு முதல் பெய்யும் மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.