;
Athirady Tamil News

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிப்ரவரி 11-ந்தேதி தொடக்கம்!!

0

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது.

முன்னதாக 10-ந்தேதி மாலை புற்றுமண் எடுத்தும், முளைப்பாரி விதைத்தும் அங்குரார்பணம் நடக்கிறது.

பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் 11-ந்தேதி மீன லக்னத்தில் நடக்கிறது. மகா சிவராத்திரியையொட்டி 18-ந்தேதி நந்தி வாகன வீதிஉலா நடக்கிறது. 19-ந்தேதி கல்யாண உற்சவம், 20-ந்தேதி திரிசூல ஸ்நானம், கொடியிறக்கம் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.