;
Athirady Tamil News

2 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்தது!!

0

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24-ந்தேதி பாதிப்பு 89 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 102, நேற்று 132 ஆக இருந்த நிலையில் இன்று மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 437 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 49 ஆயிரத்து 802 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நேற்று மட்டும் 108 பேர் அடங்குவர். தற்போது 1,896 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரத்தில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,739 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.