;
Athirady Tamil News

யாழ் சாரண ஆணையாளராக மேலதிக மாவட்ட செயலர் எம். பிரதீபன்!!

0

யாழ் சாரண ஆணையாளராக மேலதிக மாவட்ட செயலர் எம். பிரதீபன் யாழ்ப்பாண சாரணர் மாவட்டத்தின் புதிய சாரண ஆணையாளராக யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

பிரதம ஆணையாளர் திரு. ஜனப்பிரித் பெர்ணான்டோ அவர்களிடமிருந்து இதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழை நேற்று (29)பெற்றுக்கொண்டார்.

யாழ் சாரணர் மாவட்ட ஆணையாளர் திரு.தவகோபால் அவர்கள் ஒய்வுபெற்றமையினைத் தொடர்ந்து பிரதீபன் அவர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது . புதிய ஆணையாளருக்கு யாழ் மாவட்ட சாரணர்கள் வாழ்த்துக்களை இதன்போது தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.