;
Athirady Tamil News

போதைப்பொருள் சுற்றி வளைப்புகள்; 285 பேர் கைது!

0

நாடளாவிய ரீதியில் நேற்று (29) மேற்கொண்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் போதைப்பொருளுடன் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது செய்யும் முகமாக நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார், இராணுவம் மற்றும் விமான படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சந்தேக நபர்கள் அனைவரும் நேற்று காலை முதல் நண்பகல் வரையிலான 5 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு களிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் மேல்மாகணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களுள் 60 பேர் போதைப்பொருள் வர்ததகத்தில் ஈடுபவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு மற்றும் தெற்கிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்டப்ட ஒட்டுமொத்த சுற்றிவளைப்புகளில் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 1 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 1 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.