;
Athirady Tamil News

கம்பஹா வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் சாரதி போதைப்பொருளுடன் கைது!

0

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கம்பஹா பொது வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் சாரதி ஒருவர் யாகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட அம்பியூலன்ஸ் சாரதி நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தகவல் வெளியாகியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீதுவ ரத்தொலுகம கொடுகுடா பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் மினுவாங்கொடை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் கருணாரத்னவினால் யாகொடமுல்ல வைத்து குறித்த சாரதி சோதனையிட்டபோதே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.