;
Athirady Tamil News

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் !!

0

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 5 ஆம் திகதி இந்த விலை திருத்தம் ஏற்படலாம் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு விலை சூத்திரத்திற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 700 முதல் 800 ரூபா வரை அதிகரிக்கவுள்ளது.

எப்படியிருப்பினும் லிட்ரோ நிறுவனம் இதன் விலையை 350 முதல் 400 ரூபாவினால் மாத்திரம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிலவும் போர் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்து வருவதே எரிவாயு விலை உயர்வுக்கு முக்கிய காரணமெனவும் லிட்ரோ நிறுவன தகவல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.