;
Athirady Tamil News

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரை தமிழ் உப தலைப்புக்களுடனேயே வெளியிடப்படும்!!

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரை இனிவரும் காலங்களில் தமிழ் உப தலைப்புக்களுடனேயே வெளியிடப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் தனுஸ்க ராமநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கும் யாழ்ப்பாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக கண்டிப்பான உத்தரவை ஜனாதிபதி ஊடகப்பிரிவுக்கு விடுத்துள்ளார்.

இனிவரும் காலங்களில் தனது உரைகள் யாவுமே தமிழ் உப தலைப்புக்களுடனேயே வெளியிடப்பட வேண்டும்- என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.