;
Athirady Tamil News

ஐரோப்பாவுக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது- நார்வே குற்றச்சாட்டு !!

0

ஐரோப்பிய நாடுகள் அனைத்துக்கும் ரஷியா பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், அது நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும் நார்வேயின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். நார்வே ராணுவ மந்திரி ஜோர்ன் அரில்ட் கிராம் கூறுகையில், “நார்வே மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

மேலும் மேற்கத்திய நாடுகளுடனான மோதல் நீண்ட காலம் நீடிக்கும்” என்றார். நாட்டின் அச்சுறுத்தல் தொடர்பாக நார்வேயின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆணையம் அளித்த வருடாந்திர மதிப்பீடுகளைத் தொடர்ந்து அரில்ட் கிராம் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

புனித நூல் எரிப்பு போன்ற ஆத்திரமூட்டும் நிகழ்வுகளால் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்று உள்நாட்டு பாதுகாப்பு சேவையின் தலைவர் பீட் கங்காஸ் எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.