;
Athirady Tamil News

ரஷ்யாவை விட்டு உடன் வெளியேறுங்கள் -அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை !!

0

ரஷ்யாவில் உள்ள தனது குடிமக்களை விரைவில் வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் மற்றும் ரஷ்ய சட்ட அமலாக்க அமைப்புகளால் தன்னிச்சையாக கைது அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதால் உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களுக்கு கூறியுள்ளது.

இது குறித்து ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “ரஷ்யாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும். தவறான தடுப்புக்காவல்களின் ஆபத்து காரணமாக அதிக எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

தற்போதைக்கு குடிமக்கள் யாரும் ரஷ்யாவிற்கு பயணம் செய்ய வேண்டாம். ரஷ்ய பாதுகாப்பு சேவைகள், அமெரிக்க குடிமக்களை போலியான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளன.

ரஷ்யாவில் உள்ள அமெரிக்க குடிமக்களை தனிமைப்படுத்தி தடுப்புக்காவல் மற்றும் துன்புறுத்தல்களை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. தமது குடிமக்களுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான சிகிச்சையை மறுத்து, இரகசிய விசாரணைகளில் அல்லது நம்பகமான ஆதாரங்களை முன்வைக்காமல் அவர்களை தண்டித்துள்ளது.

ரஷ்ய அதிகாரிகள் தன்னிச்சையாக அமெரிக்க குடிமக்கள், மத ஊழியர்களுக்கு எதிராக உள்ளூர் சட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்கள். மற்றும் மத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க குடிமக்கள் மீது சந்தேகத்திற்குரிய குற்றவியல் விசாரணைகளைத் திறந்துள்ளனர்” என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.