;
Athirady Tamil News

துருக்கி நிலநடுக்கம்- இடிபாடுகளில் இருந்து 5 பேர் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு!!

0

துருக்கி, சிரியாவில் கடந்த 6-ந்தேதி அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே கட்டிட இடிபாடுகளில் பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். துருக்கியில் ஹடாய் நகரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களில் 5 பேர் 8 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 13-ந் தேதி, இடிபாடுகளில் 18 வயது முகம்மது கபர் என்பவர் 198 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.