;
Athirady Tamil News

அவுரங்காபாத் ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

0

மராட்டிய போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலை 5.45 மணி அளவில் அழைப்பு ஒன்று வந்தது. இதில் பேசிய ஆசாமி “நான் பணம் செலுத்தி விட்டேன். ஆனால் எனது வேலை நடக்கவில்லை. இதனால் மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் கிளை கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக” கூறி அழைப்பை துண்டித்து கொண்டார்.

இது பற்றி அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் வெடிகுண்டு படை பிரிவுடன் ஐகோர்ட்டிற்கு சென்று 2 மாடிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.