;
Athirady Tamil News

உக்ரைனிலும் சுட்டு வீழ்த்ப்பட்ட உளவு பலூன்கள் !!

0

தலைநகர் கீவ் மேல் பறந்துகொண்டிருந்த ஆறு ரஷ்ய உளவு பலூன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

6 ரஷ்ய பலூன்கள் கீவ் மீது காணப்பட்டதாகவும், பெரும்பாலானவை வான் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் இராணுவ நிர்வாகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பலூன்கள் பிரதிபலிப்பான்கள் (corner reflectors) மற்றும் உளவு கருவிகளை சுமந்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அவை தலைநகரின் மீது எப்போது பறந்தன என்பது குறிப்பிடவில்லை, இருப்பினும் புதனன்று கீவில் வான் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன.

தகவல்களின்படி, இவை காற்றின் உந்துதலின் கீழ் காற்றில் நகரும் பலூன்கள் என்று இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் வான் பாதுகாப்பைக் கண்டறிந்து தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த பலூன்கள் ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரியில் உக்ரைனை ஆக்கிரமித்த ரஷ்யா , அதன் உளவுத்துறை ஆளில்லா விமானங்களின் இருப்புகளைப் பாதுகாக்க ஒரு புதிய இயக்கத்தில் பலூன்களைப் பயன்படுத்தக்கூடும் என்று உக்ரைன் விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறியுள்ளார்.

உக்ரைனின் தலைநகரில் புதன்கிழமை இந்த பலூன்கள் தலைக்கு மேல் பறப்பதைக் கண்டபோது விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. இந்த பலூன்களை உக்ரைனிய வான் பாதுகாப்பை திசை திருப்ப ரஷ்யா பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.