;
Athirady Tamil News

மூன்று வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் உக்ரைன் – ரஷ்யா போர்: ஒரு தெளிவுப் பார்வை!!

0

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தலைப்புச் செய்திகளில் இருந்து மறைந்திருக்கிறது. ஆனால், போரின் வீரியம் இன்னும் குறையவில்லை. உண்மையில், ஒரு வருடம் கழித்துப் பார்க்கும்போது, உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மூன்று வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருப்பதை நாம் அறியலாம்.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டோன்பாஸ் பகுதியின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு ரஷ்யா கடந்த வாரத்தில்கூட கடும்போர் புரிந்ததாக அமெரிக்கா தெரிவித்து இருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ஒரு வருடம் கடந்திருக்கிறது ஆனால் போரில் யாரும் ஆதிக்கம் பெறவில்லை. பல வழிகளில் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையில், ஒரு வருடம் கழித்து பார்க்கும்போது உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மூன்று வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருப்பதை நாம் அறியலாம்.

முதலாவது: ரஷ்யா பின்னடைவை சந்திக்கும் – போர் தொடங்கியபோது ரஷ்யா கீவ், டான்பாஸ் மற்றும் கெர்சன் மாகாணங்களில் தாக்குலை தொடர்ந்தது. எனினும் இத்தாக்குதல்கள் தோல்வியடைந்தன. 2022 செப்டம்பரில் உக்ரைனிடமிருந்து சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட நான்கு மாகாணங்களில் பெரும் பகுதியையும் ரஷ்யா இழக்கிறது. இதனால், கீவ் நகரில் ஆட்சி மாற்றத்தை ரஷ்யாவால் கொண்டுவர முடியவில்லை. அங்கு ரஷ்யாவின் இலக்கு சரிந்தது. மேலும், ரஷ்யாவால் உக்ரைன் மீட்கப்பட்ட பகுதிகளை மீண்டும் மீட்டு கிரிமியாவை நோக்கி முன்னேறியது. இதற்கு முக்கிய காரணம், போரில் சண்டையிடுவதற்கு ஆட்கள் பற்றாக்குறையை உக்ரைனில் ரஷ்யா சந்தித்ததுதான். போர் புரிவதற்குச் சிலரை கண்டறிந்தாலும் அவர்களுக்கு பயிற்சி போதவில்லை. இதனால் ரஷ்ய ராணுவம் சோர்வை சந்தித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.