;
Athirady Tamil News

வெள்ளத்தினால் மோசமான பேரழிவை சந்தித்த மற்றொரு நாடு! இதுவரை 39 பேர் பலி..74 பேர் மாயம்

0

பிரேசிலில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

பலி எண்ணிக்கை 37
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கனமழை பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

புயல் சேதம் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் கிட்டத்தட்ட 150 நகராட்சிகளை பாதித்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்தனர் மற்றும் 10,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்துடன் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் 74 பேர் மாயமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளம் காரணமாக வீடுகள், பாலங்கள் பல இடங்களில் இடிந்து விழுந்துள்ளன. மேலும் சாலைகளின் இடிபாடுகளில் காணாமல் போனதாகக் கூறப்படும் டசன் கணக்கானவர்களை மீட்புப் படையினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக ரியோ கிராண்டே டோ சுல் அதிகாரிகள் அங்கு அவசரகால நிலையை அறிவித்துள்ளனர்.

வரலாற்றில் மிக மோசமான பேரழிவு
இதற்கிடையில் மீட்பவர்களும், படையினரும் தங்கள் வீடுகளில் சிக்கியுள்ள குடும்பங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பலர் உயரும் நீரில் இருந்து தப்பிக்க கூரைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

ஆளுநர் எட்வர்டோ லைட், ”ரியோ கிராண்டே டோ சுல் அதன் வரலாற்றில் மிக மோசமான பேரழிவை கையாள்கிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.