;
Athirady Tamil News

பெண் கிராம அதிகாரி மீது கொடூர தாக்குதல்… வைத்தியசாலையில் அனுமதி!

0

களுத்துறை பகுதியில் பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்ததால் பெண் கிராம அதிகாரிக்கும் சந்தேக நபருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கிராம அதிகாரியைத் தாக்கிய நபர் வஸ்கடுவ பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் இவர் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை களுத்துறை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.