;
Athirady Tamil News

சீனா நிதி உத்தரவாதத்தை வழங்காவிட்டாலும் இலங்கைக்கு நிதி உதவி – ஆராய்கின்றது சர்வதேச நாணயநிதியம்!!

0

சீனாவின் நிதி உத்தரவாதமின்றி இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் ஆராய்ந்து வருகின்றது.

சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு நிதி வழங்குவதற்கு சீனாவின் உத்தரவாதம் மாத்திரம் தடையாக உள்ளதால் சீனாவின் நிதி உத்தரவாதமின்றி இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் நிதியை வழங்கலாம் என தெரிவித்துள்ள புளும்பேர்க் சர்வதேச அமைப்பு இலங்கை விடயத்தில் தான் எப்போதாவது பயன்படுத்தக்கூடிய கொள்கையை பின்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபை தங்களின் கடன்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்துவதற்காக இலங்கை அதிகாரிகள் தங்களிற்கு கடன்வழங்கிய நாடுகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச நாணயநிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விடயத்தில் சர்வதேச நாணயநிதியம் பின்பற்றக்கூடிய கொள்கைகள் குறித்து தற்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள பேச்சாளர் கொள்கை நடவடிக்கைகள் செயற்படுத்தப்படுவது தொடர்பில் சர்வதேச நாணயநிதிய அதிகாரிகள் இலங்கையுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.