;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் தொழிற்சாலைக்கான முகாமைத்துவ மென்பொருள் கையளிப்பு!!

0

நமது உழைப்பு அமைப்பின் நிதி அனுசரணையில், யாழ்ப்பாணம் – வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் கல்லுண்டாய் இயற்கை உரம் உற்பத்தி தொழிற்சாலை முகாமைத்துவ மென்பொருள் கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

தவிசாளர் அ.ஜெபநேசன் தலைமையில் மானிப்பாயில் உள்ள அதன் தலைமையக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில், நமது உழைப்பு நிறுவன நிறுவுனர் வேலுப்பிள்ளை தனபாலசிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இயற்கை உர உற்பத்தி தொழிற்சாலைக்கான முகாமைத்துவ மென்பொருளை கையளித்து, செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் வலி தென் மேற்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், நமது உழைப்பு அமைப்பின் பிரதிநிதிகள், மென்பொருள் உருவாக்கிய தனியார் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.