;
Athirady Tamil News

இலங்கையர்களுக்கு இத்தாலியில் வேலை வாய்ப்பு!!!

0

இத்தாலியில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்துகிறது.

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முதன்மையான பங்களிப்பு சுற்றுலாத் துறை எனவும், தமது நாடு இத்துறையின் வளர்ச்சிக்கு இலங்கைக்கு பங்களிக்கும் எனவும் இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.