;
Athirady Tamil News

ஆந்திராவில் லாரி மீது கார் மோதி விபத்து- 5 பேர் உயிரிழப்பு!!

0

ஆந்திரா மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள மேடராமெட்லா என்ற பகுதியில் நேற்று இரவு லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 வயது சிறுமி உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு அவர்கள் 5 பேரும் சைனாகஞ்சம் மண்டலத்தின் சோபிராலில் உள்ள சிவன் கோவிலில் வழிபாடுக்கு சென்றனர்.

பின்னர் இரவு 11.30 மணியளவில் குண்டூரில் உள்ள தங்கள் வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.