;
Athirady Tamil News

பிரெஞ்சு கடல் பகுதியில் நடந்த துயரசம்பவம் – மக்கள் கண் முன்னே நிகழ்ந்த பயங்கரம் !!

0

பிரெஞ்சுக் கடல் பகுதியில் நீந்திக்கொண்டிருந்த சுற்றுலாப்பயணி ஒருவரை, மக்கள் கண் முன்னே சுறா ஒன்று துவம்சம் செய்த பயங்கர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 19 ஆம் திகதி பிரான்சுக்கு சொந்தமான New Caledonia பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 59 வயதான சுற்றுலாப்பயணி ஒருவரே இவ்வாறு சுறா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இந்த பயங்கர சம்பவத்தைப் பார்த்த மக்கள் பயந்து அலற, மீட்புக் குழுவினர் உடனடியாக படகில் விரைந்து, அவரை கரைக்குக் கொண்டுவந்து அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்தனர்.

ஆம்புலன்ஸ் ஒன்று சம்பவ இடத்துக்கு வந்த நிலையிலும், அவர் அங்கேயே உயிரிழந்துவிட்டார்.

அவரைத் தாக்கியது புலிச் சுறா என்னும் நான்கு மீற்றர் நீள சுறாமீன் என கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.