;
Athirady Tamil News

இலங்கை என்பது இந்தியாவிற்கு பாக்கிஸ்தான் இல்லை – ஜெய்சங்கர்!!

0

பாக்கிஸ்தானின் பொருளாதார நெருக்கடி குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கருத்து வெளியிட்டுள்ளார்.

பாக்கிஸ்தானின் எதிர்காலம் என்பதை அதன் தெரிவுகளும் நடவடிக்கைகளுமே தீர்மானிக்கும் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் பாக்கிஸ்தான் தனது பொருளாதார நெருக்கடியிலிருந்து எவ்வாறு வெளிவரும் என்பதே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான இந்தியாவின் உதவி குறித்தும் கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த வேளை இந்தியா உதவியது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலானஉறவு பாக்கிஸ்தானுடனான உறவிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது இதனையும் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.