;
Athirady Tamil News

கேரளாவில் இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற கோவை தொழிலாளி கைது!!

0

கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் உள்ள தபால் அலுவலகத்திற்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் சென்றார். பின்னர் அந்த பெண் தபால் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை திடீரென கட்டி பிடித்து கற்பழிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி சென்றனர். அவர்களை கண்டதும் அந்த வாலிபர் தப்பி ஓடினார். இதுபற்றி அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து அந்த வாலிபரை தேடினர். அப்போது அவர் ஆலுவா ரெயில் நிலையத்தில் நிற்பது தெரியவந்தது. அவரை ரெயில் நிலைய போலீசார் உதவியுடன் ஆலுவா போலீசார் பிடித்தனர். அவரிடம் நடந்த விசாரணையில் அந்த வாலிபர் தமிழகத்தின் கோவை பகுதியை சேர்ந்த தொழிலாளி செல்வன் என தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.