;
Athirady Tamil News

வாயை மூடு: உட்காரு சபையில் ஒரே சத்தம் !!

0

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) உரையாற்றிக்கொண்டிருந்த போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவ்வப்போது குறுக்கு கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

ஒருசிலரின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, சிலர் கேள்விகளைக் கேட்க முற்படுகையில், கேள்விகளைக் கேட்கவிடாது தொடர்ச்சியாக உரையாற்றினார்.

இதனால் தங்களுடைய ஆசனங்களில் இருந்து எழுந்துநின்றிருந்த எம்.பிக்கள் பலர், சலித்துப்போய் அமர்ந்துவிட்டனர்.

அதுவரையிலும் நிதானமாக பதிலளித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில், எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு முகங்கொடுக்கமுடியாது, “உட்காரு: வாயை மூடு” என விரலை நீட்டி சுட்டிக்காட்டி கடுந்தொனியில் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.