;
Athirady Tamil News

பிரபாகரனை மறக்க மாட்டாம்: சிறிதரன் !!

0

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே எமது தலைவர் என்றும் வாழ்நாள் முழுவதும் அவரை நாம் மறக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ். சிறிதரன், உங்களாலும் பிரபாகரனை மறக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், நீதியமைச்சர் விஜேதாஸவை பார்த்து நீங்கள் இனவாதத்தை விதைப்பவர் என்றும் நீங்கள் ஓர் இனவாதி எனவும் ஆவேசமாக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நீங்கள் தற்போதும் பிரபாகரனை மறக்கவில்லை, நாங்களும் மறக்கப் போவதில்லை. வாழ்க்கை முழுவதும் மறக்க மாட்டோம் எங்கள் தலைவர் பிரபாகரன்தான், அவர் நேர்மையான கண்ணியமான தலைவர் என்று குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் பிரபாகரனை விமர்சிக்காதீர்கள், படித்தவர்கள், போல் உரையாற்றுங்கள் முட்டாள் போல் பேச வேண்டாம் , நீங்கள் இனவாதத்தை விதைப்பவர். நீங்கள் ஓர் இனவாதி” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.