;
Athirady Tamil News

சத்தீஸ்கரில் டிரக் மீது வேன் மோதி பயங்கர விபத்து- 11 பேர் பலி!!

0

சத்தீஸ்கர் மாநிலம், பலோடபஜார்- பட்டாபரா மாவட்டத்தில் உள்ள பாடாபரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கமாரியா கிராமம் அருகே டிரக் மீது பிக்-அப் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 4 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் சிம்கா பகுதியில் உள்ள கிலோரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அர்ஜூனி பகுதியில் ஒரு குடும்ப விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விபத்தில், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.