;
Athirady Tamil News

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 3 ஆயிரம் கோவில்கள் கட்டப்படுகிறது!!

0

ஆந்திர மாநிலத்தில் இந்து மத நம்பிக்கையை பாதுகாக்க திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 3,000 கோவில்கள் கட்டப்படுகிறது. இது தொடர்பாக ஆந்திர அறநிலையத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான கோட்டு சத்தியநாராயணா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கோவில் இருப்பதை உறுதி செய்ய மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். அவரது வழிகாட்டுதலின்பேரில், இந்து மத நம்பிக்கையை பாதுகாக்கவும், பரப்பவும் கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 3,000 கோவில்கள் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளை சார்பில் கோவில்கள் கட்டுவதற்காக தலா ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. 1,330 கோவில்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுதவிர, மேலும் 1,465 கோவில்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு சில சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையின் பேரில் மேலும் 200 கோவில்கள் கட்டமைக்கப்படும். கோவில் கட்டும் திட்டம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.