;
Athirady Tamil News

பூமி நேரம் கடைபிடிப்பு- டெல்லியில் 279 மெகாவாட் மின்சாரம் சேமிப்பு!!

0

காலநிலை மாற்றங்கள் மற்றும் ஆற்றல் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக தனிநபர்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள அனைத்து விளக்குகளையும் ஒரு மணி நேரம் அணைக்க ‘பூமி நேரம்’ என்ற நிகழ்வு ஊக்குவிக்கிறது. இந்த ‘பூமி நேரம்’ நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று மார்ச் 25ம் தேதி அன்று ‘பூமி நேரம்’ கடைபிடிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு இந்தியாவின் முக்கிய தளங்களில் பூமி நேரத்தைக் கடைபிடிக்கும் வகையில் விளக்குகள் அணைக்கப்பட்டது. அதன்படி, தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன், அக்ஷர்தம் கோவில், மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பாலம் உள்ளிட்ட இடங்களில் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அணைக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் நேற்று பூமி நேரம் கடைபிடிக்கப்பட்டதில் 279 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவே கடந்த ஆண்டில் 171 மெகாவாட் மின்சாரம் மட்டுமே சேமிக்கப்பட்டதாக தெரிவித்தனர். பிஎஸ்இஎஸ் டிஸ்காம்களான பிஆர்பிஎல் மற்றும் பிஒய்பிஎல் ஆகிய பகுதிகளில் 178 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். டாடா பவர் டெல்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (TPDDL) நுகர்வோர் 2023 பூமி நேரத்தில் 15 மெகாவாட் சேமிக்க முடிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், டெல்லி கண்டோன்மண்ட் மற்றும் புதுடெல்லி நகராட்சி கவுன்சில் (என்டிஎம்சி) பகுதியில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தின் புள்ளிவிவரங்கள் வெளியிடவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.