;
Athirady Tamil News

எரிபொருள் சந்தையில் புதிய 3 நிறுவனங்கள்!!

0

இலங்கையின் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர திங்கட்கிழமை (27) அறிவித்தார்.

ஷெல் நிறுவனத்துடன் இணைந்து சீனாவின் சினோபெக், யுனைட்டட் பெற்றோலியம் ஒஃப் அவுஸ்திரேலியா மற்றும் யுஎஸ்ஏ ஆர்எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் 20 வருடங்களுக்கு பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் இயக்கப்பபடும் 150 எரிபொருள் நிலையங்கள் ஒவ்வாரு நிறுவனத்துக்கும் வழங்கப்படும் என்பதுடன் புதிய இடங்களில் 50 நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.