ஆங்கில கால்வாயில் அகதிகள் படகில் தீ விபத்து: 157 போ் பாதுகாப்பாக மீட்பு
பிரான்ஸ்-பிரிட்டன் இடையிலான ஆங்கில கால்வாயைக் கடக்க முயன்ற அகதிகளின் படகில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, கடலில் தத்தளித்த 157 பேரை பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் மீட்புக் குழுவினா் பத்திரமாக மீட்டனா்.
பிரான்ஸின் நாா்மண்டி கடலோரத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட இப்படகினை பிரான்ஸ் மீட்புக் குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வந்த நிலையில், இரவில் உதவி கோரிய 5 போ் மட்டும் முதலில் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனா்; மற்றவா்கள் உதவியை மறுத்துவிட்டனா்.
இந்நிலையில், பிரிட்டன் எல்லையொட்டி பிரான்ஸின் கடலோரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை படகின் மோட்டாரில் தீப்பிடித்து படகு மூழ்கத் தொடங்கியது. இதையடுத்து, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் படையினா் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, பிரான்ஸ் சாா்பில் 103 பேரும், பிரிட்டன் சாா்பில் 54 பேரும் மீட்கப்பட்டு, பிரான்ஸின் வடக்குப் பகுதியில் உள்ள பூலோன் சுா் மொ் துறைமுகத்துக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் உதவிக்காக அழைத்து வரப்பட்டனா்.