;
Athirady Tamil News

கேரளாவில் பூட்டிய வீட்டுக்குள் 5 சாக்கு மூடைகளில் கட்டுக்கட்டாக செல்லாத பழைய 1000 ரூபாய் நோட்டுக்கள்!!

0

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. போலீசார் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஏராளமான சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஏராளமான காகிதங்களும் சிதறி கிடந்தன. அவற்றை போலீசார் திறந்து பார்த்தனர். இதில் 5 சாக்கு மூட்டைகளில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருந்தது. இதுபோல ஏராளமான போலி ரூபாய் நோட்டுக்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

சில கட்டுக்களில் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் மட்டும் ரூபாய் நோட்டுக்களும், இடையில் வெறும் காகிதங்களும் இருந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார் சாக்கு மூடைகளில் செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அடைத்து வைத்தது யார்? எதற்காக நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.