;
Athirady Tamil News

1,074 சமுர்த்தி வங்கிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் !!

0

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 1,074 சமுர்த்தி வங்கிகளை தனியான நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு செயற்பட்டு வருவதாக சமுர்த்தி தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சாமர தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி நிதியில் இருந்து பெரும் தொகையை சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 28 ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைத்ததில் இருந்து வழங்கப்பட வேண்டிய ஊழியர் உரிமைகளை அரசாங்கம் தட்டிக்கழித்து வருகிறது.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து பதவிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 11 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து “சமுர்த்தி தொழிற்சங்கங்களை” உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.