வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் , நேற்றைய தினம் மாலை முதலாம் திருவிழா இடம்பெற்றது.
முதலாம் திருவிழாவின் போது , வேல் பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் , வள்ளி தெய்வானை வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி , பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.