;
Athirady Tamil News

பா.ஜனதா சார்பில் சமூகநீதி வார கொண்டாட்டம்- அண்ணாமலை அறிவிப்பு!!

0

பா.ஜனதா கட்சி தொடங்கப்பட்ட நாளான ஏப்ரல் 6-ந்தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்படும். இந்த ஆண்டு 6-ந்தேதி முதல் ஒருவாரம் சமூகநீதி வாரமாக கொண்டாடப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். இதுதொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க தனி குழுவையும் அமைத்துள்ளார். இந்த குழுவின் தலைவராக பேராசிரியர் ராம சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில செயலாளர்கள் மலர்கொடி, வெங்கடேசன், அசுவத்தாமன், ஓ.பி.சி. மாநில தலைவர் சாய்சுரேஷ், எஸ்.சி. பிரிவு தலைவர் தடா பெரியசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி உள்பட 10 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.

6-ந்தேதி முதல் அம்பேத்கர் பிறந்த நாளான 14-ந்தேதி வரை சமூக நீதி வாரமாக கடைபிடித்து பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் மாவட்ட, மண்டல, கிளை அளவில் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். கட்சியின் கொள்கை, கோட்பாடுகள், வரலாறு, வளர்ச்சி, இந்த இயக்கத்தை வென்றெடுத்த தலைவர்களின் வரலாறு, மோடி ஆட்சியின் சாதனைகள் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களையும் சென்றடையும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த கேட்டுக்கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.