;
Athirady Tamil News

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போப் பிரான்சிஸ் புகைப்படங்கள் வைரல்!!

0

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசூர வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும் என்பதால் டிஜிட்டல் ஓவியர்களுக்கு வரப்பிரசாதாமாக மாறியுள்ளது. அவர்கள் தங்களது கற்பனையால் தங்களுக்கு பிடித்தவர்களை செயற்கை தொழில் நுட்பத்தால் உருவம் கொடுத்து வரைந்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். அவை வைரலாக பரவுகின்றன. அந்த வகையில் ரோமன்கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிசை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.

அதில் போப் பிரான்சிஸ் பரபரப்பான ஒரு தெருவில் மோட்டார் சைக்கிள்களில் செல்வது போலவும், சாலையில் செல்வது போலவும் புகைப்படங்கள் வெளியாகின. அதுமட்டுமல்லாது போர் விமானத்தில் பறக்க தயாராவது, கூடைப்பந்து, ஸ்கெட் போடிங் விளையாடுவது, தற்காப்பு கலைகள் பயிற்சி செய்வது போன்ற போப்பிரான்சிசின் பல்வேறு புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.