;
Athirady Tamil News

கடும் வெப்பம் எதிரொலி – மேற்கு வங்காளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை!!

0

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசுகிறது.

கடுமையான வெப்பம் காரணமாக மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.