;
Athirady Tamil News

ஆவணமும் இல்லை… மூளையும் இல்லை… அமைச்சர் செந்தில் பாலாஜி!!

0

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கடந்த தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோற்றவர். அதை இன்று வரை அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்ல தவறுவதில்லை. மின் வாரியத்தில் முறைகேடு நடப்பதாக அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “தவறு நடந்து இருந்தால் கோர்ட்டுக்கு செல்லுங்கள். 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அரவக்குறிச்சியில் தோற்கடித்து விரட்டி விடப்பட்டவர்.

இன்று வரை தொகுதிப்பக்கம் வரவில்லை. எதற்கெடுத்தாலும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் என்கிறார். இவர் என்ன அந்த துறைக்கு தலைவரா? அமலாக்கத்துறை தனித்து இயங்கும் அமைப்பு. அதை இவர்கள் கைக்குள் வைத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படுகிறது. அண்ணாமலை சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு ஆவணமும் இல்லை… மூளையும் இல்லை என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.