;
Athirady Tamil News

ராஜஸ்தான் மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பச்சிளம் குழந்தைகள்!!

0

ராஜஸ்தானில் உள்ள துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU)நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 12 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மகேந்திர டாமோர் கூறுகையில், “துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியின் என்ஐசியு வார்டில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 12 குழந்தைகள் மீட்கப்பட்டனர். 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

தீயணைப்புப் பாதுகாப்பு அதிகாரி பாபுலால் சவுத்ரி கூறுகையில், “புதிதாகப் பிறந்த குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மருத்துவமனையில் இருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் குழுவுடன் மூன்று வாகனங்களுடன் சென்றேன். புகை சூழ்ந்து போதிலும் தீயை அணைத்து, குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றினோம்,” என்று அவர் கூறினார். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.