;
Athirady Tamil News

டெல்லியில் சற்று குறைவு: கொரோனா தொற்றால் 948 பேர் பாதிப்பு- இருவர் பலி!!

0

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நாட்டின் தலைநகரில் கடந்த சில நாட்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தினசரியாக 1500க்கு மேல் பதிவான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000க்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இன்று (கடந்த 24 மணி) நேரத்தில் 948 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், புதிய இறப்பு எண்ணிக்கையுடன், டெல்லியில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26,597 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.